புதுச்சேரியில் தடையை மீறி நாளை ஜல்லிக்கட்டு... ஏற்பாடுகள் தீவிரம்.. காங்கிரஸ் ஆதரவு
புதுச்சேரியில் நாளை தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.
புதுவை: பொங்கல் திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என்ற நோக்கில் நாளை புதுச்சேரியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு இருக்கிறது என்று கூறி மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் புதுவையிலும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள திருக்கனூரில் நாளை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மண்ணாடிப்பட்டு அருகே திருக்கனுரில் உள்ள அய்யனார் கோயிலில் உள்ள திடலில் ஜல்லிக்கட்டு நடத்த இப்பகுதியில் உள்ள விவசாயிகள் அறிவித்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் அங்கு தீவிரம் அடைந்துள்ளன.
அதற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், புதுவை காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் புதுவையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications