இந்த பொங்கலுக்காவது ஜல்லிக்கட்டு நடக்குமா.. மவுனம் காக்கும் மத்திய அரசு.. கண்டித்துப் போராட்டம்
வரும் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று கோரி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை: ஜல்லிக்கட்டு விளையாட்டைக்கு உள்ள தடை நீக்கி இந்த பொங்கலுக்கு போட்டியை நடத்த வேண்டும் என்று ஜல்லிக்கட்டு கமிட்டி போராட்டம் இன்று நடைபெறுகிறது.
பொங்கல் திருநாளுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான எந்த ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் செய்யாமல் உள்ளன. இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மத்திய, மாநில அரசுகளில் மெத்தனப் போக்கால் கோபம் அடைந்துள்ளனர். இதனால் தொடர்ந்து மதுரை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இன்று மதுரை வாடிவாசலில் ஜல்லிக்கட்டுப் போராட்டக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டத்தை கொண்டு வர வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு உடனடியாக செய்ய வேண்டும். மாநில அரசு அதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.
மதுரை, அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் ஆண்டாண்டாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு கடந்த இரண்டாண்டுகளாக நடைபெறாமல் உள்ளது. எனவே, இந்த ஆண்டாவது மத்திய அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்து போட்டியை நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், அரசியல் கட்சிகளும் ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்த வேண்டும் என்று போராட்டத்தில் குதித்துள்ளன. இதுதொடர்பான போராட்டத்தை திமுக நாளை போராட்டம் நடத்துகிறது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும் என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் அறிவித்துள்ளார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications