சசிக்கு பதவி ஆசை- அமைச்சர்கள் வீட்டு பெண்கள் ஆதரவு கூட இல்லை- ஜெ.வை தள்ளிவிட்ட நடிகர் 'தீபன்' பொளேர்

சசிகலா பதவி ஆசையால் அதிமுகவை கைப்பற்றியுள்ளார்; அவருக்கு அமைச்சர்கள் வீட்டு பெண்கள் கூட சசிகலாவை ஆதரிக்கமாட்டார்கள் எனவும் தீபன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அமைச்சர்கள் வீட்டு பெண்கள் கூட சசிகலாவை ஆதரிக்கமாட்டார்கள்- சசிகலாவுக்கு பதவி ஆசை என ஜானகி எம்ஜிஆரின் தம்பி மகன் நடிகர் தீபன் சாடியுள்ளார்.

எம்ஜிஆர் மறைந்தபோது அவரது உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டது. அதில் ஜெயலலிதா ஏற முயற்சித்தார். அவரை ராணுவ வாகனத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டார் நடிகர் தீபன். இது பெரும் சர்ச்சையாகவும் வரலாறாகவும் மாறிப் போனது.

அதிமுகவை தற்போது சசிகலா கைப்பற்றியுள்ளது தொடர்பாக "நக்கீரன்" இதழுக்கு நடிகர் தீபன் அளித்த பேட்டி:

சசிகலாவை ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கினார். அதன்பிறகு சசிகலா திரும்பி வரமாட்டார் என ஒவ்வொரு தொண்டனும் எதிர்பார்த்தாங்க.

நடராஜனை கொண்டுவருவதா?

நடராஜனை கொண்டுவருவதா?

ஆனால் உண்மையான ஊழியனாக இருப்பேன்னு சொல்லிட்டு சசிகலா திரும்பி வந்தாங்க. ஜெயலலிதா இறுதிநிகழ்ச்சியில் நடராஜனை கொண்டுவந்ததில் எல்லோருக்கும் ரொம்ப வருத்தம். நடராஜனை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். நடராஜனுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் யாரையுமே கட்சியில் சேர்த்து கொள்ளமாட்டேன் என்று ஜெயலலிதா பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் இவ்வளவு தைரியமா நடராஜனை முன்னிலைப்படுத்தியது ஒவ்வொரு தொண்டருக்கும் வருத்தம்தான்.

அதிகாரத்துக்காகத்தான்...

அதிகாரத்துக்காகத்தான்...

இன்னும் நான்கரை ஆண்டுகாலம் ஆட்சி இருக்கிறது என்பதற்காகத்தான் சசிகலா பின்னால் பலரும் செல்கிறார்கள். அப்படி போகிறவர்களின் வீட்டு பெண்கள் கூட சசிகலாவை ஆதரிக்கமாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அச்சப்படுகிறார்கள்

அச்சப்படுகிறார்கள்

ஜெயலலிதா ஒருபோதும் சசிகலாவை அரசியலுக்கு கொண்டுவர விரும்பியதே இல்லை. இது ஒவ்வொரு தலைவர்களுக்குமே தெரியும். எதிர்பாராதவிதமாக அவர்கள் பயப்படுகின்றனர்.

எம்ஜிஆர் நிலமை

எம்ஜிஆர் நிலமை

எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது முதல் நாள் தொண்டர்களை சந்தித்தார். அப்போது எனக்கு 17 வயது... ஆனாலும் எப்போது வேண்டுமானாலும் அவரை பார்க்கலாம் என்கிற நிலைமை இருந்தது.

ஏன் காண்பிக்கவில்லை?

ஏன் காண்பிக்கவில்லை?

அப்பல்லோவில் ஜெயலலிதாவை யாரிடமும் காண்பிக்காமல் மறைத்தது ரொம்ப பெரிய விஷயம். அதுவும் அப்பல்லோ ரெட்டியே, எப்போது வீட்டுக்கு போக வேண்டும் என்பதை ஜெயலலிதான் முடிவெடுக்கவேண்டும் என கூறியது நிலைமை மோசமாக இருக்கிறது என்பதையே வெளிப்படுத்தியது.

பதவி ஆசை

பதவி ஆசை


அப்பல்லோ ரெட்டி மிரட்டப்பட்டிருக்கலாம். சசிகலாவைப் பொறுத்தவரையில் பதவிக்கு வர வேண்டும் என்பதுதான் உண்மையான எண்ணம். பதவிக்கு வந்த பின்னர் உண்மையான தொண்டர்களை மாற்றிவிடுவார்கள்.

இவ்வாறு தீபன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+