மல்லிகை பூ விலை கடும் உயர்வு - நந்தியா வட்டை பூவை சேலம் மல்லி என கூறி மோசடி!
நெல்லையில் மல்லிகைப் பூவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நெல்லை: மல்லிகை பூ விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் போலியை வாங்கி மக்கள் ஏமாந்து வருகின்றனர்.
கடும் பனி பொழிவு காரணமாக தென் மாவட்டத்தில் பூக்களின் விளைச்சல் குறைந்து போய் விட்டது. குறிப்பாக மல்லிகை வரத்து மார்க்கெட்டுக்கு போதிய அளவு இல்லை. தோவாளை பூ மார்க்கெட்டு, சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ வரத்து குறைவாக இருப்பதால் நாள்தோறும் விலை உச்சத்தை தொட்டு வருகிறது.

நாள்தோறும் சராசரியாக 100 கிலோ மட்டுமே வருவதால் அதை பிரித்து அனுப்பி வருகின்றனர். இது உள்ளூர் தேவைக்கே போதாது. மாலை மல்லிகை பூ கிலோ ரூ.6500ஐ தொட்டது. அதிக விலை கொடுக்க வியாபாரிகள் முன் வந்தும் பல இடங்களில் பூ இல்லை என்றே தெரிவித்தனர்.
இந்நிலையில் மல்லிகை பூ போன்ற நந்தியா வட்டை பூவை சேலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு சேலம் மல்லி என்ற பெயரில் நெல்லையில் விற்கப்படுகிறது. நாட்டு மல்லி போன்று இந்த பூக்கள் காட்சியளிப்பதால் இவற்றை சேலம் மல்லி என்ற பெயரில் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த பூக்கள் மணப்பதில்லை. இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இந்த பூக்கள் தண்ணீர் பட்டாலும் விரியாது. இதை வாங்கி செல்லும் பொதுமக்கள் மீண்டும் வியாபாரியுடன் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications