சென்னை புறநகரில் ரூ. 1750 கோடி செலவில் டிரான்ஸ்பார்மர்கள் மாற்றப்படும்.. ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோதையாறு புனல்மின் நிலையத்தை நவீனப்படுத்தும் பணி ரூ.80 கோடி செலவில் மூன்று மாதங்களில் முடிக்கப்படும் என பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று ஜெயலலிதா, பல்வேறு மின்திட்டங்களை விதி எண் 110-ன் கீழ் இன்று அறிவித்துள்ளார்.

அவரது அறிவிப்புகளில் சில:
- சென்னை புறநகரில் 17,535 மின்மாற்றிகள் ரூ.1,750 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.
- சென்னை மாநகரில் உள்ள 38,844 மின்தூண் பெட்டிகள் ரூ.270 கோடி செலவில் மாற்றியமைக்கப்படும்.
- விருதுநகரில் தொகுப்பு துணைமின் நிலையம் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும்.
- ராமநாதபுரம் அனல்மின் நிலையத்திலிருந்து மின்சாரம் கொண்டு செல்ல தொகுப்பு மின்நிலையம் அமைக்கப்படும்.
- 96 துணைமின்நிலையங்கள் மற்றும் 9 தலைமை பொறியாளர், 21 மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் சூரிய ஒளி மேற்கூரை மின்உற்பத்தி நிலையம் அமைக்க நடவடிக்கை.
- தேர்தல் வாக்குறுதிப்படி 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு மின்திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டுள்ளது.
- வெளிமாநிலங்களிலி்ருந்து மின்சாரம் வாங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
- மொத்தம் ரூ.4,126 கோடி மதிப்பிலான திட்டங்களால் மின்உற்பத்தி உயர்ந்து சீரான மின்விநியோகம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications