தமிழகம் முழுவதும் தொடரும் கனமழை - ஜெயலலிதா ஆலோசனை- நிவாரணம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கன மழை பெய்து அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயகத்தில் இன்று காலை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஜெயலலிதா, நிவாரணப்பணிகள் உடனடியாக மக்களைச் சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை மாநகரில் நள்ளிரவு முதல் விடிய விடிய கொட்டியது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனிடையே
தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டும் என்று எச்சரித்துள்ளதால், மழை, வெள்ளத்தினால் மக்கள் பாதிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டிய நிவாரணப்பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று அரைமணிநேரம் ஆலோசனை நடத்தினார்.

Jaya discusses with ministers on rain issue

கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 6 அமைச்சர்கள் சென்றுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நிவாரணப்பணிகளை அமைச்சர் வேலுமணி உள்ளிட்டவர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

நிவாரணம் அறிவிப்பு

இதனிடையே தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தமிழக முதல்வர் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

நவம்பர் 10ம் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெங்கதேவன்பள்ளி கிராமத்தைச் சேர்யத சூடேசன் என்பவரின் மகள் சுகன்யா, நவம்பர் ,11ம் தேதியன்று கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், நெய்வேலி நகரத்தைச் சேர்யத திரு. சி.கே.வி. நாயர்; சிறுபாளையூர் கிராமத்தைச் சேர்யத தங்கராசு என்பவரின் மகன் முருகேசன்; சிதம்பரம் வட்டம், நாஞ்சலூர் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி என்பவரின் மகன் நடேசன்; கலியபெருமாள் என்பவரின் மனைவி கனகம்; விழுப்புரம் மாவட்டம், சொர்ணாவூர் கீழ்பாதி கிராமத்தைச் சேர்யத காசிநாதன் என்பவரின் மகன் கதிரவன்; ஆகியோர் வெள்ளப் பெருக்கின் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழயதவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+