எதற்காக மறு வாக்குப்பதிவு?.. கேட்கிறார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை: சேலம் மற்றும் நாமக்கல் தொகுதிகளில் 2 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவுககு தேர்தல் ஆணையம உத்தரவிட்டிருப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், 12 நாட்களுக்கு பிறகு மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டது ஆச்சரியத்தை தருகிறது. எந்தவொரு தேர்தல் புகாரும் வராத நிலையில் மறுவாக்குப்பதிவிற்கு உத்தரவிட்டது ஏன்?

நேர்மையான தேர்தல் பணியை தற்போதைய நடவடிக்கை சந்தேகத்துக்குள்ளாக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications