ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை: கருணாநிதி-ஸ்டாலின் வீடுகளில் போலீசார் கண்காணிப்பு
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணை இன்று நடைபெற்றதை அடுத்து சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வீடுகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியான 27ஆம் தேதியன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டு முன்பு மோதல் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு சமரசம் செய்தனர்.

கடந்த 27-ஆம் தேதி முதல் சிறையில் இருந்து வரும் ஜெயலலிதாவை விடுதலை செய்ய கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதால் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரது வீடுகளின் முன்பு போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. ஆனால் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதனையடுத்து அ.தி.மு.க. தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்தநிலையில் கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி. காலனியில் உள்ள கருணாநிதியின் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீடு ஆகியவற்றிலும், அண்ணா அறிவாலயத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கருணாநிதி, ஸ்டாலின் வீடுகள் மற்றும் அண்ணா அறிவாலயத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக் கூடாது என்பதற்காகவே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications