அனுப்புவீங்களா, மக்களை கண்டுக்காத ஜெ.வை வீட்டிற்கு அனுப்புவீங்களா?: கனிமொழி
திருவாரூர்: மக்களை சந்திக்காத அவர்கள் மீது அக்கறை இல்லாத ஜெயலலிதாவை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆடரசனுக்கு ஆதரவாக திமுக எம்.பி. கனிமொழி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,

பொது மக்கள், அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் என யாரையுமே சந்திக்காமல் இருப்பவர் ஜெயலலிதா. மத்திய அமைச்சர்கள் இரண்டு பேர் ஜெயலலிதாவை சந்திக்க முயன்றும் முடியவில்லை. இதை அவர்களே தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் மட்டும் தான் ஜெயலலிதா மக்களை சந்திக்க வருவார். மக்கள் மீது அக்கறை இல்லாத ஜெயலலிதாவை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
முன்னதாக கனிமொழி திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆதரவாக திருவாரூரில் வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications