நேற்று திமுகவுக்கு வாழ்த்து, இன்று ஸ்டாலினுக்கு வணக்கம்: ஆளே மாறிப் போன ஜெ.
சென்னை: நேற்று திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா இன்று அவரை சட்டசபையில் பார்த்ததும் வணக்கம் கூறி அசத்தியுள்ளார்.
திமுகவும், அதிமுகவும் எலியும், பூனையுமாக மோதிக் கொள்வார்கள் என்று தான் மாநில, தேசிய, சர்வதேச அளவில் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. அந்த அளவுக்கு அவர்கள் மோதிக் கொள்வார்கள்.
அறிக்கை மூலமாகவும் தொடர் போர் நடந்து வந்தது.

பிரச்சாரம்
சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுகவினர் மேடைதோறும் ஜெயலலிதாவை தாக்கிப் பேசினார்கள். சொன்னீங்களே, செஞ்சீங்களா? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று ஜெயலலிதாவை குறி வைத்து பிரச்சாரம் செய்தார்கள்.

ஜெயலலிதா
தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜெயலலிதா திமுக தலைவர் கருணாநிதியின் குடும்ப அரசியல் பற்றி மேடைதோறும் விமர்சித்தார். இப்படி தேர்தல் நேரத்திலும் கூட அவர்கள் மோதிக் கொண்டிருந்தனர்.

அறிக்கை
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுக் கொண்ட விழாவில் திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதை அறிந்து கருணாநிதி கோபமாக அறிக்கை விட்டும் ஜெயலலிதா சாந்தமாக பதில் அறிக்கைவிட்டார்.

வாழ்த்து, வணக்கம்
இருக்கை பிரச்சனை குறித்து விளக்கம் அளித்த ஜெயலலிதா தமிழகத்தின் மேம்பாட்டிற்காக செயல்படும் ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் சட்டசபையில் இன்று ஸ்டாலினும், ஜெயலலிதாவும் ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவித்துள்ளனர்.

நல்லது தான்
ஜெயலலிதா திமுகவை வாழ்த்தியதுடன் இன்று ஸ்டாலினை நேரில் பார்த்தபோது வணக்கம் கூறியது மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இதன் மூலம் சட்டசபையில் இருந்து திமுகவினர் அடிக்கடி வெளியேற்றப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications