முதல்வரின் சேலம் மாவட்டத்திலேயே ஜெயா டிவி ஒளிபரப்பு முடக்கம்.. அதிமுகவினர் அதிர்ச்சி!
சேலம் மாவட்டத்தில் ஜெயா டிவியின் அனைத்து சேனல்களும், கடந்த 3 நாட்களாக அரசு கேபிளில் தெரியவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார்.
சேலம்: சேலம் மாவட்டத்தில் ஜெயா டிவியின் அனைத்து சேனல்களும், கடந்த 3 நாட்களாக அரசு கேபிளில் தெரியவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசு கேபிள் டிவி அதிகாரிகள் எந்த விளக்கமும் தர மறுக்கிறார்கள் என்றும் சேலம் மாவட்ட மக்கள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.
இது தொடர்பாக சேலம் கொண்டலாம்பட்டி பகுதி அரசு கேபிள் வாடிக்கையாளர்கள் கூறுகையில், " சேலம் மாவட்டத்தில் இன்று மூன்றாவது நாளாக ஜெயா தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது.
தாதகாப்பட்டி, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் ஜெய டிவி, ஜெயா பிளஸ், ஜெயா மேக்ஸ் என்று எல்லா சேனல்களும் அரசு கேபிள் இணைப்புகளில் ஒளிபரப்பாகவில்லை.
அப்படியே ஒளிபரப்பு ஆனாலும் தெளிவாக இல்லாமல், குளறுபடியாக சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அரசு கேபிள் ஆப்பரேட்டரை தொடர்புகொண்டு கேட்டால்,தொழில்நுட்ப கோளாறு என்று தெரிவிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் அதே சேனல் எண்ணில் என் .டி .டி.வி வருகிறது. இது எப்படி? முதல்வர் மாவட்டம் என்பதால் சேலத்தில் அரசு கேபிள் இணைப்புகளில் ஜெயா டிவி ஒளிபரப்பு செய்யப்படவில்லை" என்று தெரிவித்தனர்.