ஜெ. விடுதலை... ஜிலேபியை சந்தோசத்தோடு சாப்பிட்ட அதிமுகவினர்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை தமிழகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். காலை முதலே தயார் நிலையில் இருந்த அவர்கள் தீர்ப்பு தந்த உற்சாகத்தில் ஜிலேபி, மைசூர்பாக்குகளை உற்சாகமாக கொடுத்து மகிழ்ந்தனர்.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. ஜெயலலிதாவை குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்த நீதிபதி குமாரசாமி, சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்ததோடு அபராதத் தொகையையும் ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

தீர்ப்பை கேட்க அதிமுகவினர் உற்சாகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
தட்டுநிறைய மைசூர்பாக், டப்பா டப்பாவாக ஜிலேபியை கொடுத்து மகிழ்ந்தனர். காலை முதலே காத்துக்கிடந்த மக்கள்

ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து உற்சாக குரல் எழுப்பினர். சிலரோ ஆனந்தக்கண்ணீர் வடித்தனர். எப்படியோ தீர்ப்பு பாதகமாக வராமல் சாதகமாக வந்து இன்னொரு சிரமத்தில் இருந்து காப்பாற்றிவிட்டதாகவே பெரும்பாலான தமிழக மக்கள் கருதுகின்றனர். எப்படியோ அதிமுகவினர் வாங்கிய இனிப்புகளும், பட்டாசுகளும் இன்றைக்காவது வீணாகாமல் போனதே என்பது அரசியல்நோக்கர்களின் கருத்தாகும்












Click it and Unblock the Notifications