பச்சை புடவை உடுத்தி ராகு காலம், எம கண்டத்திற்கு இடைபட்ட நேரத்தில் வாக்களித்த ஜெ.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா பச்சை நிற புடவை அணிந்து ராகு காலம், எம கண்டத்திற்கு இடைபட்ட நேரத்தில் வாக்களித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடந்து வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலர் காலையிலேயே வாக்களித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி காலை 7.15 மணி அளவில் கோபாலபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முதல்வர் ஜெயலலிதா தனது வீட்டிற்கு அருகே உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காலை 9.50 முதல் 10 மணிக்குள் வாக்களித்தார்.
அவரும் சரி, அவருடன் வந்திருந்த அவரது தோழி சசிகலாவும் சரி பச்சை நிற புடவை அணிந்திருந்தனர். ஜெயலலிதா ராகு காலம், எம கண்டத்திற்கு இடைபட்ட நேரத்தில் வாக்களித்துள்ளார். சிம்ம ராசிக்காரரான அவருக்கு இன்றைய நாள் ஆதாயமான நாள் ஆகும்.
முன்னதாக ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தபோதும் பச்சை நிற புடவை அணிந்திருந்தார். அவர் நேரம் வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் இருந்த பெண்களில் இரண்டு பேர் பச்சை நிற புடவை அணிந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications