ஜெ. அரசுக்கு எதிராக சதி, துரோகம் செய்பவர்கள் எட்டப்பர்கள்… அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி
ஜெயலலிதாவின் அரசுக்கு எதிராகச் சதி மற்றும் துரோகம் செய்பவர்கள் எட்டப்பர்கள் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சிக்கு எதிராகச் சதி மற்றும் துரோகம் செய்பவர்கள் எட்டப்பர்கள் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று அமைச்சர் ஜெயக்குமார் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழகத்தில் வரும் 2021ம் ஆண்டில்தான் சட்டசபை தேர்தல் நடைபெற வேண்டும். அதற்கு முன்பாக ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவது என்பது சரியானதல்ல. ஒரு முறை தேர்தல் நடத்த குறைந்தது 1000 கோடி செலவாகும்.

எட்டப்பர்கள்
தமிழகத்தில் நடந்து வரும் ஜெயலலிதாவின் அரசுக்கு எதிராகச் சதி, துரோகம் செய்பவர்கள் எட்டப்பர்கள். ஜெயலலிதாவின் கனவை சிதைப்பவர்கள் எட்டப்பர்கள். கட்சிக்குள் பிரச்சனை என்பது அண்ணன் தம்பிகளுக்குள் நடக்கிறது.

ஸ்டாலின் கனவு
இந்த அண்ணன் தம்பி சச்சரவில் ஆதாயம் தேடலாம் எனக் கனவு காண்கிறார் ஸ்டாலின். இதனைப் பயன்படுத்திக் கொண்டு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க ஸ்டாலின் துடிக்கிறார். அவரது
எண்ணம் மக்களுக்கு விரோதமானது- அதனை மக்கள் நிராகரிப்பார்கள்.

குழந்தைகள் அல்ல
மதுரை மேலூரில் நடைபெற்ற தினகரனின் கூட்டத்திற்கு செல்லக் கூடாது என்று எந்த எம்எல்ஏவையும் கடத்தி வைக்கவில்லை. அவர்களது இயலாமையால் எம்எல்ஏக்கள் கடத்தப்பட்டதாகப் புகார் கூறுகின்றனர். எம்எல்ஏக்களை கடத்த அவர்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல.

விரைவில் இணையும்
அதே போன்று தொகுதிக்கு நிதி ஒதுக்காமல் இழுத்தடிப்பு என்பது பொய்யான புகார். எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது.
பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகள் இணைப்பு என்பது செயல்வடிவம் பெற்றுள்ளது. விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கிறோம்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications