சினிமா போல கட்டிப்பிடி வைத்தியம் பார்த்தால் காவிரி வந்துவிடுமா? கமலுக்கு ஜெயக்குமார் கேள்வி
கட்டிப்பிடி வைத்தியம் பார்த்தால் காவிரியில் தண்ணீர் வந்துவிடுமா ? என்று கமலுக்கு ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
சென்னை : சினிமா போல் கட்டிப்பிடி வைத்தியம் பார்த்தால் காவிரியில் தண்ணீர் வந்துவிடுமா என்று அமைச்சர் ஜெயக்குமார் கமல்ஹாசனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று கர்நாடக முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்து காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது காவிரி விவகாரத்தில் பேசி சுமூகமான தீர்வை எட்ட வேண்டும் என்று கமல் தெரிவித்து இருந்தார். இந்தக் கருத்து தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், சினிமா போல கட்டிப்பிடி வைத்தியம் பார்த்தால் காவிரியில் எப்படி தண்ணீர் வரும்? கர்நாடக முதல்வர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்தது சரியான நடவடிக்கை அல்ல.
ஸ்டெர்லைட் நிர்வாகம் எந்த நீதிமன்றத்திற்கு போனாலும் இனி ஆலையைத் திறக்க முடியாது. ஸ்டெர்லைட்டை மூடுவது அரசின் கொள்கை முடிவு என்று அவர் தெரிவித்துள்ளார்.