நிதியமைச்சர் ஜெயக்குமார் வரலாறு தெரியுமா? கேட்கிறார் மதுசூதனன்! - வீடியோ
நிதியமைச்சர் ஜெயக்குமார் அதிமுக காரரே இல்லை அவருடைய வரலாறு தெரியுமா என்று மதுசூதனன் கேட்டுள்ளார்.
சென்னை: அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியினர் ஆளுக்கு ஆள் வசைபாடுவதே வேலையாகி விட்டது. இப்போது அதிகம் அடிபடுவது நிதியமைச்சர் ஜெயக்குமார்தான். அவருடைய வரலாறு தெரியுமா? அவர் அதிமுககாரரே இல்லை என்று ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் கூறியுள்ளார்.
தண்டையார் பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், சிலருடைய வற்புறுத்தலினால்தான் சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக்கினேன் என்றார்.
நிதியமைச்சர் ஜெயக்குமார் ஒரு சமோசாவை வைத்து காலத்தை ஓட்டியவர், இரவு நேரங்களில் குடிதான் என்று ஆக்சன் செய்து காட்டினார். இதுதான் அவரது வரலாறு என்றும் கூறினார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே தமிழக முதல்வராக ஆசைப்பட்டவர்தான் ஜெயக்குமார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார் மதுசூதனன். அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு பேச்சுவார்த்தை நடக்கிறதோ இல்லையோ இவர்களின் அக்கப்போர் சண்டை அடிக்கடி நடக்கிறது.