கடல் கடந்து அந்தமானில் போட்டியிடும் அதிமுக.. உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா
சென்னை : அந்தமான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து 7 பேர் கொண்ட பட்டியலையும், அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில்..

அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழு எடுத்த முடிவின்படி, அந்தமான் மாநிலத்தில் செப்டம்பர் 20-9-2015 அன்று நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.
நயக்காம் (வார்டு12)-கணேசன் (அந்தமான் மாநில அவைத்தலைவர்),
டிக்னாபாத் (வார்டு4)-ராணி (முன்னாள் பொதுக்குழு உறுப்பினர்),
டேரிபார்ம் (வார்டு14)-தடியப்பன்
பாத்துபஸ்த்தி (வார்டு19)-முத்தையா,
சவுத்பாய்ண்ட் (வார்டு11)-கலைச்செல்வி,
புனிதாபாத் (வார்டு 8)-வாசு,
சமத்தி உறுப்பினர்(சோர்பாயிண்ட் பேரூராட்சி)-எம்.ராமையா ஆகியோர் போட்டியிடுவதாக அந்த அறிவிப்பில் ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications