Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மழை வெள்ள மரணங்கள்: 25 குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் - ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்த மேலும் 25 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில், கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் 25 பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பெய்த கன மழையினால், கடந்த 2ம் தேதி சென்னை, எழும்பூர் வட்டம், கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திரு. வெங்கடேசன் என்பவரின் மகன் ரவிக்குமார்; கடந்த 3ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், வேளூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. மணி என்பவரின் மகன் பாக்கியராஜ்; ஆலந்தூர் வட்டம், நந்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திரு. கிருஷ்ணன் என்பவரின் மனைவி சுசீலா; மகள் விஜயலட்சுமி மற்றும் மகன் வெங்கடேஷ்; சென்னை, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த திரு. ராஜா என்பவரின் மகன் தயாளன்; புரசைவாக்கம் வட்டம், ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த திரு. பலராமன் என்பவரின் மகன் லட்சுமிபதி; கிண்டி வட்டம், ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்த திரு. பாலசந்திரன் என்பவரின் மனைவி சங்கராந்தி மற்றும் மகன் சீனிவாஸ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Jayalalitha announces Rs 4 lakh to families of 25 persons

கடந்த 4ம் தேதி விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், ஏமப்பேர் கிராமத்தைச் சேர்ந்த திரு. காமதேனு என்பவரின் மகன் பிரபு; காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த திரு. மாணிக்கம் என்பவரின் மகன் சாமிநாதன்; கடந்த 5ம் தேதி, கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திரு. கெல்லன் என்பவரின் மகன் சின்னத்தம்பி; கடந்த 6ம் தேதி, திருப்போரூர் வட்டம், சிறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த திரு. கிருஷ்ணன் என்பவரின் மனைவி சரஸ்வதி; மதுராந்தகம் வட்டம், கெண்டரைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த திரு. கன்னியப்பன் என்பவரின் மகன் நொச்சிலி; சென்னை, மயிலாப்பூர், கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த திரு. மாரி என்பவரின் மகன் பாஸ்கர் ஆகியோர் மரணமடைந்துள்ளனர்.

கடந்த 8ம் தேதி, தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. முத்தையா என்பவரின் மனைவி கிருஷ்ணம்மாள்; கடந்த 9ம் தேதி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், புங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த திரு. அண்ணாமலை என்பவரின் மகன் பரசுராமன்; ஆகியோர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும் கேட்டு துயரமடைந்தேன்.

கடந்த 4ம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், மகனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. கோவிந்த கவுண்டர் என்பவரின் மகன் பெரியதம்பி; கடந்த 7ம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வடகுச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு. பரந்தாமன் என்பவரின் மகன் அகிலன்; மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. ராஜாமணி என்பவரின் மகன் சசிக்குமார்; கடந்த 8ம் தேதி, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், காரங்காடு கிராமத்தைச் சேர்ந்த திரு. பிறவிப் பெருமாள் என்பவரின் மகன் ஆறுமுக நயினார்; திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், முத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. கட்டையன் என்பவரின் மகன் முனியன்; ஆகியோர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; கேட்டு துயரமடைந்தேன்.

கடந்த 8ம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், ஈச்சங்குடி கிராமத்தைச் சேர்ந்த திரு. ராஜேந்திரன் என்பவரின் மனைவி மாரியம்மாள்; விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், செம்பொன் நெறிஞ்சி கிராமத்தைச் சேர்ந்த திரு. மூக்கையா என்பவரின் மகன் பழமுதிர்சோலை; திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், வேலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த திரு. சண்முகம் என்பவரின் மகன் செல்வம்; ஆகியோர் மழையின் காரணமாக மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து தாம் மிகவும் துயரமடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு நிகழ்வுகளில் மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த இந்த 25 நபர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+