ரங்கசாமி செயலற்ற முதல்வராகிவிட்டார்… ஜெயலலிதா குற்றச்சாட்டு
புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. மத்திய அரசு செய்த தவறுகளையும் என்.ஆர்.காங்கிரஸ் அரசு தட்டிக் கேட்கவில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஓமலிங்கத்தை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:
''மத்தியில் தற்போது ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. எனவே, மக்கள் விரோத ஆட்சியை தூக்கியெறிந்து மக்களாட்சி மலரச் செய்ய வேண்டும். தமிழர்களின் நலன் காக்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும்.
பாதுகாப்பு துறையை பாதுகாப்பற்ற துறையாக மாற்றிவிட்டது மத்திய அரசு. கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துவிட்டது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ரங்கசாமிக்கு வாக்களிக்கும்படி உங்களை கேட்டுக்கொண்டேன். அந்த தேர்தலில் ரங்கசாமிக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த என்.ஆர்.காங்கிரஸ் அ.தி.மு.க.வை ஓரங்கட்டிவிட்டு, சுயேட்டையாக நின்று வெற்றி பெற்றவரின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இருப்பினும் ரங்கசாமி செயல்படாத முதல்வராகவே இருந்து வருகிறார்.
புதுச்சேரியில் அமைந்துள்ள ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் அரசால் புதுவையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் புதுச்சேரியில் அ.தி.மு.க. அரசு அமைந்திருந்தால் மக்கள் நலத்திட்டங்கள் நடந்திருக்கும்.
என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. மத்திய அரசு செய்த தவறுகளையும் என்.ஆர்.காங்கிரஸ் அரசு தட்டிக் கேட்கவில்லை.
மீனவர் பிரச்னை, அன்னிய முதலீடு உள்ளிட்ட உள்ளிட்ட பிரச்னைகளில் என்.ஆர்.காங்கிரஸ் மௌனம் சாதிக்கிறது.
புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தர மத்திய அமைச்சர் நாராயணசாமி என்ன செய்தார்?
தொழிற்சாலை, விமான நிலைய விரிவாக்கத்துக்கு நாராயணசாமி நடவடிக்கை எடுக்கவில்லை" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications