ஜெ. கனவுகள் நிறைவேற நாங்க உதவுவோம்.. வெங்கய்யா நாயுடு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்ற பாஜக அரசு துணையாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு உறுதியளித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா கனவுகளை நனவாக்க மத்திய அரசு துணை புரியும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னையில் முதல் சுரங்க மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

திருமங்கலம் முதல் நேரு பூங்கா இடையே வரை 7.4 கி.மீ தூரம் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பயணிக்கும். திருமங்கலம், பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட 7 வழித் தடங்களை சுரங்க மெட்ரோ ரயில் இணைக்கிறது.
ரயில் போக்குவரத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு, 'அனைவருக்கும் வணக்கம்' என தமிழில் கூறி உரையை தொடங்கினார்.
மெட்ரோ ரயில் சேவைக்கான தொடக்க விழாவில் ஜெயலலிதா இல்லாதது வருத்தம் அளிக்கிறது என்று கூறினார். மேலும், சென்னையில் மெட்ரோ ரயில் சேவை என்ற ஜெயலலிதாவின் கனவு நனவாகியுள்ளது என்றும், ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்க மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பொதுமக்களின் போக்குவரத்தில் மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கும் என்றும் வெங்கய்யா நாயுடு குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications