ஜெயலலிதா வேலூர்- நெல்லை தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மே 10ம் தேதி நெல்லை மாவட்டத்தில் மேற்கொள்வதாக இருந்த தேர்தல் பிரசாரம் மே 12ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே போன்று மே 12ம் தேதி வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்வதாக இருந்த தேர்தல் பிரசாரம் மே 10ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வரும் நிலையில் ஜெயலலிதாவின் பிரச்சார தேதியிலும் இப்போது மாற்றம் ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அதன்படி, மே 10ம் தேதி நெல்லையில் நடைபெற இருந்த தேர்தல் பிரசாரம் மே 12ம் தேதிக்கும், மே 12ம் தேதி வேலூரில் நடைபெற இருந்த தேர்தல் பிரசாரம் மே 10ம் தேதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அதிமுக 227 இடங்களிலும், கூட்டணி கட்சிகள் 7 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதற்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது.
அன்றைய தினம் மாலையிலேயே ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண திட்டம் குறித்து அறிவிப்பு வெளியானது.
அதன்படி, கடந்த 9ம் தேதி சென்னையில் தொடங்கிய அவரது பிரசாரம் மே 12ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
சென்னை மற்றும் விருத்தாசலத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை ஜெயலலிதா நிறைவு செய்துள்ளார். இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தில் சிறிய மாற்றம் செய்து அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதாவது, மே 10ம் தேதி நெல்லை மாவட்டத்தில் மேற்கொள்வதாக இருந்த தேர்தல் பிரசாரம் மே 12ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று மே 12ம் தேதி வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்வதாக இருந்த தேர்தல் பிரசாரம் மே 10ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல்வர் ஜெயலலிதாவின் 14ம் நாள் தேர்தல் பிரசாரம் மே 10ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வேலூரில் நடைபெறுகிறது. இதில், வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், அரக்கோணம் (தனி), சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, கீழ் வைத்தியணான் குப்பம் (தனி), போளூர், ஆரணி, செங்கம் (தனி), கலசபாக்கம் ஆகிய தொகுதிகள் இடம் பெறுகின்றன.
15ம் நாள் தேர்தல் தேர்தல் பிரசாரம் மே 12ம் தேதி (வியாழக்கிழமை) நெல்லையில் நடைபெறுகிறது. இதில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம் (தனி), கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவன்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் இடம் பெறுகின்றன.