தேய்பிறை தினத்தில் வெளியிடப்பட்ட அதிமுக தேர்தல் அறிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை, ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்யும் முதல்வர் ஜெயலலிதா, அதிமுகவின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், இன்று பெருந்துறை கூட்டத்தில், ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் வெளியிட்டார். இன்று தேய்பிறை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் நிதி அமைச்சர் பொன்னையன் உள்ளிட்டோர் அடங்கிய குழு அதிமுக தேர்தல் அறிக்கையை, இரவு பகல் பாராமல் தயாரித்து, அதை சில வாரங்கள் முன்பே, ஜெயலலிதாவின் பார்வைக்கு கொண்டு சேர்த்தது.

Jayalalitha expected to release it's election manifesto on May 6

பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கை அம்சங்களை பார்த்துவிட்டு, தங்கள் அறிக்கைக்கு இறுதி வடிவம் தரலாம் என்று ஜெயலலிதா திட்டமிட்டிருந்தாராம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பொன்னையன் உள்ளிட்டோரோடு மீண்டும், ஒருமுறை, ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அப்போது, தேர்தல் அறிக்கையை மெருகேற்ற ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு அருகேயுள்ள பெருந்துறையில் இன்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டார். லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

பெண் மற்றும் ஒரு விவசாயிக்கும், பிரதிகள் வழங்கப்பட்டன. தேய்பிறையான இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+