நான் கலந்து கொண்ட மெட்ரோ விழாதான் ஜெ.வுக்கு கடைசி பங்ஷன்.. வெங்கையா!
மெட்ரோ விழாவில் ஜெயலலிதா இல்லாதது வருத்தம் அளிக்கிறது என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னை: மெட்ரோ விழாவில் ஜெயலலிதா இல்லாத வருத்தம் அளிக்கிறது என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். அரசியலலில் தான் மிகவும் மதிக்கும் ஒரு தலைவி ஜெயலலிதா என்றும் அவர் கூறினார்.
சென்னை கோயம்பேடு - நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை இன்று தொடங்குகிறது. இதனை முதல்வர் எடப்பாடி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோர் தொடங்கி வைக்கவுள்ளனர்.

இதற்கான விழா சென்னை திருமங்கலம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் ஜெயலலிதா இல்லாதது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.
ஜெயலலிதா மிகவும் துணிச்சலான தலைவர் என புகழாரம் சூட்டிய அவர், அனைவரையும் கவரக்கூடியவர் அவர் என்றும் கூறினார். மேலும் கட்சிக்கு அப்பாற்பட்டு தான் மதிக்கும் ஆற்றல் மிக்க தலைவி ஜெயலலிதா என்றும் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
சென்னையில் மெட்ரோ சேவையை தொடங்கும் ஜெயலலிதாவின் கனவு நனவாகியுள்ளது என்றும் அவர் கூறினார். ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்க மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் இன்றும் வெங்கையா நாயுடு உறுதியளித்தார்.
தான் பங்கேற்ற மெட்ரோ ரயில் நிகழ்ச்சியில் தான் ஜெயலலிதா கடைசியாக பங்கேற்றார் என்றும் அவர் கூறினார். செப்டம்பர் மாதம் நடைபெற்ற மெட்ரோ நிகழ்ச்சிக்குப் பிறகுதான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications