தவ வாழ்க்கை வாழ்வதாக கூறும் ஜெயலலிதா இமயமலை பக்கம் போயிறலாமே.. இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

கோவை: தவ வாழ்க்கை மேற்கொள்வதாக கூறும் ஜெயலலிதா, இமயமலைக்கு சென்றால் தமிழக மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார். சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவிற்கு மரண அடி கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சட்டசபை தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு 210 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிகாரித்து வருவதாகவும், இந்த வெற்றி ஜெயலலிதாவிற்கு கிடைக்கப் போகும் மரண அடி என்றும் இளங்கோவன் தெரிவித்தார்.

Jayalalitha may go to the Himalayas Says EVKS Elangovan

தொடர்ந்து பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக பொதுக் கூட்டத்திற்கு பணம் கொடுத்து ஆடு, மாடுகளை போல அழைத்துச் செல்லும் மக்களுக்கு, காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தவ வாழ்க்கை வாழ்கின்றேன் என்று சொல்கின்ற ஜெயலலிதா, சென்னையிலும் தமிழ்நாட்டிலும் உட்கார்ந்து கொண்டு எப்படி தவம் செய்ய முடியும். தயவு செய்து இமயமலைக்கு சென்று அங்கே தவம் செய்தால் அவரு கிடைக்க வேண்டியது கிடைக்கும். அதனால் தமிழக மக்களுக்கும் ஒரு பெரிய விடுதலை கிடைக்கும் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+