ஜெயலலிதா கொலை செய்யப்பட்டது உண்மைதான்- ஜெ.வின் தோழி கீதா பரபரப்பு குற்றச்சாட்டு
ஜெயலலிதா கொலை செய்யப்பட்டது உண்மைதான் என ஜெ.வின் தோழி கீதா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதா கொலை செய்யப்பட்டது உண்மைதான் என அவரது தோழி கீதா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைப்பதற்கும் அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் நீடித்து வரும் நிலையில் அவர் கொலை செய்யப்பட்டது உண்மைதான் என ஜெயலலிதாவின் தோழியான கீதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைப்பதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். பன்னீர்செல்வத்தை மிரட்டித்தான் சசிகலா குடும்பத்தினர் ராஜினாமா கடிதத்தை பெற்றுள்ளனர் என தான் ஏற்கனவே கூறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
சசிகலா இப்போது மட்டும் அல்ல எப்போதுமே முதலமைச்சராகி விடக்கூடாது என்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான கீதா கூறினார்.












Click it and Unblock the Notifications