இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட மீனவர்களை தமிழகம் அழைத்து வர ஜெயலலிதா உத்தரவு
சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரை தமிழகம் அழைத்து வர முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பரிந்துரை செய்ததை அடுத்து இலங்கை சிறைகளில் இருந்து 55 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்க்காவல் துறை, பருத்தித்துறையில் உள்ள நீதிபதிகளின் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இந்த மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இதனையடுத்து திரிகோணமலை சிறையில் இருந்து 10 பேரும், மன்னார் சிறையில் இருந்து 41 பேரும் விடுதலையாகினர்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விரைவில் தமிழகம் வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இலங்கை அரசு விடுவித்த மீனவர்களை தமிழகம் அழைத்து வர முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு பரிந்துரை செய்த போதிலும் படகுகளை திருப்பித்தர மறுப்பு தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications