தேவர் குருபூஜை: கொடநாட்டில் ஜெயலலிதா அஞ்சலி- பசும்பொன்னில் கோலாகலம்
தேவர் குருபூஜை: கொடநாட்டில் ஜெயலலிதா அஞ்சலி- பசும்பொன்னில் கோலாகலம்
கொடநாடு: முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு, கொடநாடு முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தேவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தேவர் ஜெயந்தி, குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 108வது ஜெயந்தி விழாவும், 53வது தேவர் குருபூஜையை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

6000 போலீசார்
பசும்பொன்னில் ஏராளமான அரசியல் தலைவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்து தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 6000 போலீசார் பசுப்பொன்னில் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆள் இல்லா விமானம்
பசும்பொன்னில் மின்வாரிய அலுவலகம் அருகே தாற்காலிகமாகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வெளியூர்களிலிருந்து வந்து செல்லும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. தேவர் நினைவிடம் அருகே 200 கார்களை ஒரே இடத்தில் நிறுத்திவைக்கும் வகையில் தாற்காலிக கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 28 ஆம் தேதி முதல் ஆள் இல்லா உளவு விமானம் மூலமும் பாதுகாப்பு பணி நடைபெற்று வருகிறது.

மதுரையில் அஞ்சலி
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவுக்குச் செல்லும் வழியில். அமைச்சர் செல்லூர் ராஜு, மேயர் ராஜன் செல்லப்பா, திமுக., பொருளாளர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட பல தலைவர்கள், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கொடநாட்டில் ஜெயலலிதா
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கொடநாடு முகாம் அலுவலகத்தில் முத்துராமலிங்கத்தேவர் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். கடந்த ஆண்டு போயஸ்கார்டனில் தேவர் படத்திற்கு அஞ்சலி செலுத்திய ஜெயலலிதா, இந்த ஆண்டு கொடநாட்டில் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications