For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொடநாட்டில் இருந்து ஜெயலலிதா நாளை சென்னை திரும்புகிறார்

Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தல் முடிவடைந்ததும், முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 27 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு கோடநாடு சென்றார்.

அங்கு 20 நாட்கள் தங்கியிருந்த அவர் நாளை சென்னை திரும்புகிறார். இதற்காக கோடநாட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையத்தை சென்றடையும் ஜெயலலிதா, அங்கிருந்து விமானத்தில் சென்னை வருகிறார்.

Jayalalitha return to Chennai tomorrow…

நாளை மதியம் 1.30 மணி அளவில் விமான நிலையத்தை வந்தடையும் அவருக்கு அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். வருகிற 16 ஆம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அதற்கு முன்னதாக கோடநாட்டில் இருந்து ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் அதிமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamil Nadu CM Jayalalitha return from Kodanadu to Chennai Tomorrow. Many exit polls give a positive result to ADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X