ஜெயலலிதா வாரிசு நான்தான்.. சான்று கேட்டு தாசில்தாரிடம் தீபக் விண்ணப்பம்!
மறைந்த ஜெயலலிதாவின் வாரிசான தன்னை அறிவிக்க சான்று கோரி தீபக் விண்ணப்பம் செய்துள்ளார்.
சென்னை :ஜெயலலிதாவின் வாரிசாக தன்னை அறிவிக்க வேண்டும் என்று கோரி அவரது அண்ணன் மகன் தீபக் வட்டாட்சியரிடம் வாரிசு சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இந்திய அரசியலில் தனி இடத்தை பெற்ற பெண் அரசியல்வாதி என்ற பெருமையைப் பெற்றவர் ஜெயலலிதா. டிசம்பர் 5ம் தேதி 2016ல் அவர் மரணம் முதல் கட்சியை யார் நிர்வகிப்பது, சொத்துகளுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன. கட்சிக்கு உரிமை கொண்டாடி சசிகலா தரப்பும், முதல்வர் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையம் நீதிமன்றம் என்று முட்டிமோதி வருகின்றன.

இந்நிலையில் தன்னை ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்குமாறு சென்னை கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கோரிக்கை விடுத்துள்ளார். ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு உரிமை கோரும் விதமாக வாரிசு சான்று கேட்டு தீபக் விண்ணப்பம் அளித்துள்ளதாக தெரிகிறது.
ஆனால் இந்த கோரிக்கையை வட்டாட்சியர் மறுத்துள்ளதோடு, நீதிமன்றத்தை நாடி இந்த விவகாரத்தில் தீர்வு கண்டு கொள்ளும்படி வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே தீபக் வாரிசு சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார், அவரது சகோதரியான தீபாவும் வாரிசு சான்று கேட்டு விண்ணப்பிப்பார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications