ஜெயலலிதா வாரிசு நான்தான்.. சான்று கேட்டு தாசில்தாரிடம் தீபக் விண்ணப்பம்!
மறைந்த ஜெயலலிதாவின் வாரிசான தன்னை அறிவிக்க சான்று கோரி தீபக் விண்ணப்பம் செய்துள்ளார்.
சென்னை :ஜெயலலிதாவின் வாரிசாக தன்னை அறிவிக்க வேண்டும் என்று கோரி அவரது அண்ணன் மகன் தீபக் வட்டாட்சியரிடம் வாரிசு சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இந்திய அரசியலில் தனி இடத்தை பெற்ற பெண் அரசியல்வாதி என்ற பெருமையைப் பெற்றவர் ஜெயலலிதா. டிசம்பர் 5ம் தேதி 2016ல் அவர் மரணம் முதல் கட்சியை யார் நிர்வகிப்பது, சொத்துகளுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன. கட்சிக்கு உரிமை கொண்டாடி சசிகலா தரப்பும், முதல்வர் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையம் நீதிமன்றம் என்று முட்டிமோதி வருகின்றன.

இந்நிலையில் தன்னை ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்குமாறு சென்னை கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கோரிக்கை விடுத்துள்ளார். ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு உரிமை கோரும் விதமாக வாரிசு சான்று கேட்டு தீபக் விண்ணப்பம் அளித்துள்ளதாக தெரிகிறது.
ஆனால் இந்த கோரிக்கையை வட்டாட்சியர் மறுத்துள்ளதோடு, நீதிமன்றத்தை நாடி இந்த விவகாரத்தில் தீர்வு கண்டு கொள்ளும்படி வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே தீபக் வாரிசு சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார், அவரது சகோதரியான தீபாவும் வாரிசு சான்று கேட்டு விண்ணப்பிப்பார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
-
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!












Click it and Unblock the Notifications