Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சசிகலாவை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு நிராயுதபாணியாக விட்டுவிட்டார் ஜெ.. திவாகரன் பரபர!

சசிகலாவை ஜெயலலிதா முழுமையாக பயன்படுத்திக் கொண்டு அவரை நிராயுதபாணியாக விட்டுச் சென்றுவிட்டார் என திவாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஜெயலலிதா சிகலாவை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு நிராயுதபாணியாக விட்டுவிட்டார்-திவாகரன்- வீடியோ

    மன்னார்குடி: சசிகலாவை ஜெயலலிதா முழுமையாக பயன்படுத்திக் கொண்டு அவரை நிராயுதபாணியாக விட்டுச் சென்றுவிட்டார் என திவாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

    ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு சசிகலா குடும்பம் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறை தண்டனை பெற்றனர்.

    சசிசலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸால் கட்சியும் ஆட்சியும் பறிபோனது. பற்றாக்குறைக்கு சசிகலா குடும்பத்தினர் மீதான வழக்குகளில் தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

    கூலாக பேட்டியளித்த சசி குடும்பம்

    கூலாக பேட்டியளித்த சசி குடும்பம்

    இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் கட்டம் கட்டி சசிகலா குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறை மெகா சோதனை நடத்தினர். இந்த சோதனை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்த நிலையில் கூலாக பேட்டியளித்து வந்தனர் சசிகலா குடும்பத்தினர்.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்

    கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்

    இந்நிலையில் நேற்று போயஸ்கார்டனிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர். சசிகலா அறையில் மட்டும் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி பென்டிரைவ் லேப்டாப் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

    பதறிய சசி குடும்பம்

    பதறிய சசி குடும்பம்

    போயஸ் கார்டனுக்குள்ளும் வருமான வரித்துறை நுழைந்த சம்பவம் சசிகலா குடும்பத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. தினகரன், விவேக், திவாகரன் என அவரது குடும்பத்தை சேர்ந்த பலரும் பதறிபோய் பேட்டியளித்து வருகின்றனர்.

    முழுமையாக பயன்படுத்திய ஜெ.

    முழுமையாக பயன்படுத்திய ஜெ.

    இந்நிலையில் மன்னார்குடியில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சசிகலாவை ஜெயலலிதா முழுமையாக பயன்படுத்திக்கொண்டு நிராயுதபாணியாக விட்டுச் சென்றுவிட்டார் என குற்றம்சாட்டினார்.

    தனியே தவிக்க விட்டு..

    தனியே தவிக்க விட்டு..

    33 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இருந்த எனது அக்காவை தன்னந்தனியே தவிக்க விட்டு சென்றுவிட்டார் என்றும் அவர் கூறினார். சசிகலாவுக்கு எந்த பாதுகாப்பும் செய்யாமல் ஜெயலலிதா விட்டு சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார்.

    எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது

    எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது

    1996 இல் இருந்தே சசிகலா விசாரணை வளையத்தில் தான் இருக்கிறார் என்றும் திவாகரன் தெரிவித்துள்ளார். சசிகலாவின் நிலைமை வேறு எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது என்றும் அவர் கூறினார். சசிகலாவின் நிலைமை மற்ற பெண்களுக்கு ஒரு பாடம் என்றும் அவர் கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+