ஓசூர் வெள்ளத்தில் சிக்கி பலியான 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ4 லட்சம் நிதி- ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஓசூர் மழைவெள்ளத்தில் சிக்கி பலியான 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ4 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஓசூரில் நேற்றிரவு 2 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இம்மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ஓசூர் அன்னை சத்யாநகர் வனிதா (40), அவரது மகள் தர்ஷினி (20), அண்ணாநகர் நந்தகுமார் (26) ஆகியோர் வெள்ளத்தில் பலியாகினர். இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ4 லட்சம் நிதி உதவியை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications