For Daily Alerts
Just In
ஓசூர் வெள்ளத்தில் சிக்கி பலியான 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ4 லட்சம் நிதி- ஜெ.
சென்னை: ஓசூர் மழைவெள்ளத்தில் சிக்கி பலியான 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ4 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஓசூரில் நேற்றிரவு 2 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இம்மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
ஓசூர் அன்னை சத்யாநகர் வனிதா (40), அவரது மகள் தர்ஷினி (20), அண்ணாநகர் நந்தகுமார் (26) ஆகியோர் வெள்ளத்தில் பலியாகினர். இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ4 லட்சம் நிதி உதவியை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார்.
Comments
English summary
Tamilnadu CM Jayalalithaa announced the fund to flood hit families in Hosur.
Story first published: Wednesday, July 27, 2016, 18:28 [IST]