ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற சாக்ஷி, சிந்துவுக்கு ஜெ. வாழ்த்து... முன்னுதாரணமாக திகழ்வதாக புகழாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற சாக்ஷி மற்றும் சிந்துவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தத்தில் சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் சிந்து, வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்தியாவுக்கு பெருமையைத் தேடித் தந்த 2 பெண்களுக்கும் நாடு முழுவதும் வாழ்த்துகள், பாராட்டுகள், பரிசு மழைகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
இதனிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில்ம் சாக்ஷிக்கும், சிந்துவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு இருவரும் உத்வேகம் அளித்துள்ளனர் எனவும் முதல்வர் ஜெயலலிதா தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications