தமிழகம் முழுவதும் கோர்ட்டுகளுக்கு இன்று விடுமுறை
ஜெயலலிதா மறைவையொட்டி தமிழகம் முழுவதும் இன்று கோர்ட்டுகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மறைந்ததையடுத்து இன்று தமிழகம் முழுவதும் கோர்ட்டுகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.

இதனையடுத்து, தமிழகம் முழுவதும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொடிகள் அனைத்தும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்டுகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகள், நிறுவனங்கள் என அனைத்து மூடப்பட்டுள்ளன. தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழக முழுவதும் இயங்கும் கோர்ட்டுக்களுக்கு இன்று விடுமுறை அளிக்கபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications