Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் வந்தபோது ஜெ சுயநினைவோடு இல்லை... கட்டை விரலை காட்டவில்லை- தீபக்

ஆளுநர் அப்பல்லோவிற்கு வந்த போது ஜெயலலிதா கட்டை விரல் காட்டி சைகை செய்ததாக தெரிவிக்கப்பட்ட தகவல் பொய் என்றும் ஜெயலலிதாவின் அண்ணண் மகன் தீபக் பரபரப்பு தகவல் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆளுநர் வந்தபோது ஜெ சுயநினைவோடு இல்லை... கட்டை விரலை காட்டவில்லை- தீபக்-வீடியோ

    சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சுயநினைவு இல்லாமல் இருந்த போதுதான் ஆளுநர் வித்யாசாகர் ராவ் வந்தார் என்று தீபக் கூறியுள்ளார். ஜெயலலிதா கட்டை விரலை உயர்த்தி காட்டியதாக கூறியது பொய் என்றும் தீபக் பரபரப்பை பற்ற டிவத்துள்ளார்.

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார்.

    உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனையில் சந்தித்தார். இதுகுறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து அறிக்கை வெளியானது.

    ஜெ.,சந்திக்கப் போன ஆளுநர்

    ஜெ.,சந்திக்கப் போன ஆளுநர்

    தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மூன்று முறை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். ஆனால் அவர் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை என கூறப்பட்டது.

    மருத்துவர்கள் சந்திப்பு

    மருத்துவர்கள் சந்திப்பு

    ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான அறிக்கைகளும் அதனை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து வதந்திகள் பரவுவதால் அதனை தடுக்க ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளித்தனர்.

    மருத்துவர்கள் தகவல்

    மருத்துவர்கள் தகவல்

    இந்த சந்திப்பின் போது தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை கண்ணாடி வழியாக பார்த்ததாகவும், ஜெயலலிதா தனது கட்டை விரலை தூக்கி காண்பித்து தான் குணமாகி வருவதை அவருக்கு உணர்த்தியதாக மருத்துவர்கள் முதன் முறையாக கூறினார்கள்.

    ஆளுநர் வருகை

    ஆளுநர் வருகை

    இப்போது மருத்துவர்கள் கூறியது பொய் என்று பேட்டி கொடுத்து பரபரப்பு தீயை பற்றவைத்துள்ளார் தீபக்.
    ஆளுநர் ஜெயலலிதாவை சந்திக்க சென்ற போது தான் மருத்துவமனையில் இருந்ததாகவும், அப்பொழுது ஜெயலலிதா சுயநினைவு இல்லாமல் இருந்தார் எனவும் தீபக் கூறியுள்ளார்.

    கட்டை விரல் காட்டவில்லை

    கட்டை விரல் காட்டவில்லை

    ஆளுநருக்கு, ஜெயலலிதா கட்டை விரல் காட்டி சைகை செய்ததாக தெரிவிக்கப்பட்ட தகவல் பொய் என்றும் ஜெயலலிதாவின் அண்ணண் மகன் தீபக் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து ஒவ்வொரு நாளும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவருவது பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது.

    ஜெயலலிதா கட்டை விரல் ஆளுநர்

    ஜெயலலிதா கட்டை விரல் ஆளுநர்

    இதுவே இப்படி என்றால் இடைத்தேர்தலுக்காக ஜெயலலிதா வெளியிட்டதாக கூறப்பட்ட அறிக்கையும், வேட்பாளர்களுக்காக ஜெயலலிதா வைத்த கட்டை விரல் ரேகையும் பொய்தான் என்பது போல தீபக் பேட்டி வெளியாகியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+