ஆங்கில பத்திரிகையில் அவதூறு பேட்டி: சுப்பிரமணியசாமி மீது ஜெயலலிதா சார்பில் மேலும் ஒரு வழக்கு
சென்னை: சுப்பிரமணியசாமி மீது ஜெயலலிதா மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு சுப்பிரமணியசாமி அளித்த பேட்டியில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறி, ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இன்று சுப்பிரமணியசாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு, ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டிற்கு சுப்பிரமணியசாமி அளித்த பேட்டியில் ஜெயலலிதா குறித்து விமர்சனம் செய்ததற்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெகன் தாக்கல் செய்துள்ள மனுவில் "முதல்வரின் நற்பெயர் மற்றும் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சுப்பிரமணியசுவாமி பேட்டியளித்துள்ளார். தமிழக மீனவர் பிரச்சினை குறித்தும் அவதூறு பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியின் உண்மை தன்மையை ஆராயாமல் செய்தி வெளியிட்டுள்ளது, டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேடு.
இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது, உள்நோக்கம் கொண்டது. இச்செய்தியை வெளியிட்டதற்காக பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளரையும் தண்டிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications