ஏழைமக்கள் மீது சுமையை ஏற்றுவதா? எல்.பி.ஜி. விலை உயர்வுக்கு ஜெ.கண்டனம்!

இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''அண்மையில் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தல்களில் விலைவாசி உயர்விற்கு எதிராக வாக்கு என்னும் அம்பினை மக்கள் எய்தியும், அதனை சற்றும் பொருட்படுத்தாமல், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விநியோகத் தொகையை 3 ரூபாய் 46 காசு ஏற்றி, அதனை மக்கள் மீது சுமத்தியிருப்பது, பழிக்குப் பழி என்ற எண்ணத்தில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்படுவது போல் அமைந்துள்ளது.
மாதாமாதம் டீசல் விலையையும், பெட்ரோல் விலையையும் ஏற்றி விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்து, வாகன உரிமையாளர்களையும், பொதுமக்களையும் ஆற்றொணாத் துயரத்திற்கு ஆளாக்கி வரும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தற்போது ஏழை, எளிய தாய்மார்களின் வயிற்றிலும் அடித்துள்ளது. மத்திய அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
விண்ணை முட்டும் விலைவாசியையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், இது போன்று விலைவாசி உயர்விற்கு வித்திடும் செயலைச் செய்து கொண்டே இருப்பது முற்றிலும் நியாயமற்ற செயல் ஆகும். இது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது தேவையற்ற சுமையை ஏற்றுகின்ற செயலாகும்.
மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு உருளையின் எண்ணிக்கையை 9 என்று குறைத்து, ஏழை, எளிய நடுத்தர மக்களின் மீது தாங்கொணா சுமையை மத்திய காங்கிரஸ் அரசு சுமத்தியது. 2011 ஆம் ஆண்டு சமையல் எரிவாயு உருளையின் விலையை மத்திய அரசு உயர்த்தியபோது, ஏழைத் தாய்மார்களின் துயர் துடைக்கும் வகையில், மாநில அரசுக்கு உள்ள குறைந்த நிதி ஆதாரத்தையும் பொருட்படுத்தாமல், அதன் மீதான மதிப்புக் கூட்டு வரியை நான் முழுவதுமாக ரத்து செய்தேன். இதனால் தமிழக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 120 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது மானிய விலையிலான எரிவாயு உருளை விலையை மத்திய காங்கிரஸ் அரசு 3 ரூபாய் 46 காசு உயர்த்தி உள்ளது. முகவர்களுக்கு வழங்கப்படும் முகவர் கமிஷன் உயர்த்தப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்று தெரிவித்தாலும், இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
விலைவாசி விஷம் போல் ஏறி உள்ள இந்தச் சூழ்நிலையில், உயர்த்தப்பட்ட முகவர் கமிஷனை மத்திய அரசே ஏற்றுக் கொள்வது தான் நியாயமானது ஆகும். அதனை விடுத்து இந்தச் சுமையை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது சுமத்துவது என்பது மக்களின் உணர்வுகளுக்கு கிஞ்சித்தும் மதிப்பு அளிக்காத நிலையையே காட்டுகிறது.
இந்த சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறுவதோடு, இதன் விலையை மேலும் குறைப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications