For Daily Alerts
Just In
81வது பிறந்தநாள் காணும் பிரதமருக்கு ஜெயலலிதா வாழ்த்து
இந்தியாவின் 13வது பிரதமராக தற்போது பதவி வகித்து வரும் மன்மோகன் சிங், 1932ம் ஆண்டு செப்டம்பர் 26ம் நாள் பிறந்தவர். அதன்படி, இன்று தனது 81வது பிறந்தாநாளைக் கொண்டாடும் பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், பிரதமர் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் தனது வாழ்த்துச் செய்தியில், ‘பிரதமரின் பிறந்த நாளான இந்த இனிய நன்னாளில் தம்முடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும், பிரதமர் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
English summary
Tamil Nadu Chief Minister J.Jayalalithaa Thursday greeted Prime Minister Manmohan Singh on his 81st birthday.
Story first published: Thursday, September 26, 2013, 14:56 [IST]