காவல்துறை மானியக்கோரிக்கை முடிந்தது: நாகத்தம்மனுக்கு நன்றி சொன்ன ஜெ.,

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் இன்று காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய ஜெயலலிதா, சபை ஒத்திவைக்கப்பட்டதும் கோட்டை வாசலில் இருந்த நாகாத்தம்மன் கோவிலை வணங்கி விட்டு பூசாரிக்கு ஒரு கவர் கொடுத்து விட்டுச் சென்றார்.

கோட்டூர்புரம் வரசித்தி விநாயகரைப் போல தலைமைச் செயலக வாசலில் உள்ள கோட்டை நாகாத்தம்மனும் முதல்வர் ஜெயலலிதாவின் இஷ்ட தெய்வ லிஸ்டில் இணைந்து விட்டார். முக்கிய நிகழ்வுகளின் போது நாகத்தம்மன் கோயில் அருகே காரை நிறுத்தி ஜெயலலிதா வணங்குவார்.

Jayalalithaa prayers the Nagathamman Temple

சட்டசபையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணி துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று, முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார். பகல் 12.15 மணிக்கு அவர் உரையாற்றி முடித்ததும் சபை ஒத்திவைக்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா கோட்டையில் இருந்து வீட்டுக்கு 12.45 மணிக்குப் புறப்பட்டார். அப்போது கோட்டை நுழைவு வாயிலில் இடதுபுறம் உள்ள நாகதேவதை அம்மன் கோவில் அருகே முதல்வர் கார் நிறுத்தப்பட்டது.

கோயில் பூசாரி, சுவாமிக்கு தீபாரதனை காட்டி, முதல்வர் ஜெயலலிதாவிடம் எடுத்து வந்தார். அதை தொட்டு வணங்கிய முதல்வர் ஜெயலலிதா அந்த பூசாரிக்கு ஒரு கவர் கொடுத்து விட்டு சென்றார்.

கோட்டை முழுவதும் நேற்றிரவில் இருந்தே போலீஸ் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. ஒருவித பதற்ற உணர்வுடனேயே காணப்பட்டது. முதல்வரின் துறையான காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நல்லபடியாக முடிந்ததற்கு முதல்வர் ஜெயலலிதா நாகாத்தம்மனுக்கு நன்றி கூறிச் சென்றார் என்று அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+