கொடநாடு கொலையில் சிக்கிய ஜெ. மாஜி டிரைவர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை?
கொடநாடு பங்களாவின் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிக்கியுள்ள ஜெயலலிதாவின் மாஜி கார் டிரைவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் என்று தகவல் சேலத்தில் பரவியது. இதனை போலீசார் மறுத்துள்ளனர் என்
சேலம்: கொடநாடு பங்களா காவலாளியை கொலையில் தொடர்பு இருப்பதாக தேடப்பட்டு வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் பரவியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மற்றொரு காவலாளி கிஷண்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதா மற்றும் சசிகலா தொடர்பான ரகசிய ஆவணங்களை கொள்ளையடிக்க இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கைது
5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில், நேற்று கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் உள்பட 6 பேர் சிக்கினர்.

விபத்து
இந்தக் கொலை விசாரணை பரபரப்பாக சென்று கொண்டிருந்த அதே நேரத்தில், ஜெயலலிதாவின் மாஜி கார் ஓட்டுநர் கனகராஜ் தீவிரமாக போலீசாரால் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவர் போலீசாரிடம் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது.

என்கவுண்டர்
இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியான கனகராஜை விசாரித்தால் உண்மைகள் பல வெளியே தெரிந்துவிடும்; அதனால் அவரை போலீசார் தீர்த்துக் கட்ட முடிவு செய்து என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக சேலத்தில் பரபரப்பு தகவல் பரவியது.

மறுப்பு
இதனால் பதற்றமான போலீஸ் தரப்பு, கனகராஜ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படவில்லை என்றும், அவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்றும் செய்தி வெளியிட்டு எஸ்கேபானது. போலீசார் அப்படி சொன்ன பிறகுதான் கொடநாடு கொலை சம்பவத்தில் உள்ள மர்மம் மேலும் அதிகரித்துள்ளது.

மர்மம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் நடைபெற்ற ஒரு விபத்தில் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தார் என்றால் விபத்து நடந்த இடம் எது என்று இன்னும் தெரியவில்லை. எந்த இரு வாகனத்திற்கும் இடையே விபத்து நடைபெற்றது என்ற தகவலையும் போலீசார் இதுவரை வெளியிடவில்லை.

ரகசியத்தை மறைக்க..
இதனால், இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என்று கூறப்படுகிறது. ஜெயலலிதா மற்றும் சசிகலா தொடர்பான ஏதோ ஒரு ரகசியத்தை மறைப்பதற்காகவே கனகராஜ் பலி கொடுக்கப்பட்டுள்ளார் என்றே சேலத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. மேலும், இதன் பின்னால் உள்ள சதி விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications