ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றியை எதிர்த்து வழக்கு- ஹைகோர்ட் நோட்டீஸ்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரி, ஜெயலலிதா ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் டி. சுரேஷ் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஜூன் மாதம் டைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்ததாகவும், ஆனால் தனது மனுவை தேர்தல் ஆணையம் முறைகேடாக நிராகரித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

jayalalithaa

இதனால் ஆர்.கே.நகர் தேர்தலை சட்டவிரோதம் என அறிவித்து, அந்த தொகுதிக்கு நடந்த தேர்தலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரி, முதல்வர் ஜெயலலிதா மற்றும் வேட்பாளர்கள் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

டிராபிக் ராமசாமி வழக்கு

இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைதேர்தலில் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டும், அதிகார துஷ்பிரயோகம் செய்தும் வெற்றி பெற்றுளளதாகவும் எனவே, அவரது தேர்தல் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஆஜராகாததால் வழக்கை 3 வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+