முதல்வர் ஜெயலலிதா விரைவில் பணிக்கு திரும்புவார் - டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை : முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சையால் ஜெயலலிதா குணமடைந்து வருவதாகவும், பூரண நலமடைந்து ஜெயலலிதா விரைவில் பணிக்கு திரும்புவார் என்றும் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 2 வாரத்திற்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்த்து நலம் விசாரிக்க ஏராளமான அரசியல் பிரமுகர்கள் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டு விடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதால் யாரும் முதல்வரை சந்திக்க முடியவில்லை.

ஆளுநர் வித்யாசாகர் ராவ் முதல் ராஜீவ் காந்தி வரை பலரும் அப்பல்லோவிற்கு வந்து மருத்துவர்களிடம் உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர். இந்த நிலையில் இன்று அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேட்டறிந்தார்.
மருத்துவமனையை விட்டு வெளியே வந்த டாக்டர் கிருஷ்ணசாமி, முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சையால் ஜெயலலிதா குணமடைந்து வருவதாகவும், பூரண நலமடைந்து ஜெயலலிதா விரைவில் பணிக்கு திரும்புவார் என தெரிவித்தார். முதல்வரின் உடல் நிலை குறித்து அமைச்சர்கள் பன்னீர் செல்வம், விஜயபாஸ்கரிடம் கேட்டு அறிந்ததாகவும் கிருஷ்ணசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications