வெள்ள சேதம்... ராஜ்நாத்சிங்குடன் ஜெ. தொலைபேசியில் ஆலோசனை! மத்திய குழுவை உடனே அனுப்ப கோரிக்கை!!
சென்னை: தமிழக வெள்ள சேத விவரம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக மத்திய குழுவை உடனே அனுப்ப வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் தொலைபேசி மூலம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.
வரலாறு காணாத பருவமழையில் தமிழகம் கடும் சேதத்தை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட முதல்வர் ஜெயலலிதா, வெள்ள சேத பாதிப்புகளை மதிப்பீடு செய்ய உடனே மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் தேசிய பேரிடர் நிதியைப் பெற தமிழக அரசின் அறிக்கை வரும் 23-ந் தேதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் ராஜ்நாத்சிங்கிடம் ஜெயலலிதா தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ராஜ்நாத்சிங், தமிழக அரசின் அறிக்கை கிடைத்த பின்னர் அதனடிப்படையில் மத்திய குழு அனுப்பி வைக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
அத்துடன் வெள்ள சேத மீட்புப் பணியில் மத்திய அரசின் உதவிக்கு ராஜ்நாத்சிங்கிடம் ஜெயலலிதா நன்றி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications