ஆந்திரா சிறையில் உள்ள 516 தமிழர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்: சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெ. கடிதம்
சென்னை: ஆந்திரா சிறையில் வாடும் 516 தமிழக தொழிலாளர்களை ஜாமீனில் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
செம்மரம் வெட்டச் சென்றதாகக் கூறி நூற்றுக்கணக்கான தமிழர்களை ஆந்திரா அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இவர்களில் பலர் ஆண்டுக்கணக்கில் விசாரணை ஏதுமின்றி சிறையில் வாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ஆந்திராவில் வனம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் 516 தமிழக தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை ஜாமீனில் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பலருக்கு ஜாமீன் பெற தகுதி இருந்தும் உரிய சட்ட உதவி கிடைக்காமல் தவிக்கின்றனர்.
பெரும்பாலானோர் மீது குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் பலரும் ஜாமீன் பெற முடியும். இவர்களுக்கு சட்ட உதவி கிடைக்க உதவ வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications