சின்னமலை முதல் விமானநிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை: ஜெ., வெங்கைய்யா தொடக்கி வைத்தனர்
சென்னை: சென்னை விமானநிலையம் - மீனம்பாக்கம் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று கணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். முதல் ரயிலை அம்சவேணி என்ற பெண் ஓட்டுநர் இயக்கினார். விமானநிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர், கிண்டி மற்றும் சின்னமலை ரயில் நிலையங்களுக்கு இன்று திறந்துவிடப்பட்டன. விமானநிலையத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் வெங்கய்ய நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், 2 வழித் தடங்களில் 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலம் வழியாக மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.

முதலாவது வழித்தடத்தில், கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, 2வது வழித்தடத்தில் சின்னமலை - விமான நிலையம் இடையே மேம்பாலப் பணிகளும், முதல் வழித்தடத்தில் ஷெனாய் நகர் - கோயம்பேடு இடையே சுரங்கப் பாதை பணிகளும் விரைவுபடுத்தப்பட்டன.
இதில், சின்னமலை - விமான நிலையம் இடையிலான 8.6 கி.மீ. வழித்தடப் பணிகள் கடந்த ஜூலை மாதமே முடிவடைந்தது. ரயில் நிலையங்களில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வந்தன. இந்த வழித்தடத்தில் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக் ஆய்வு நடத்தி, ரயிலை இயக்குவதற்கான அனுமதியை அளித்தார்.

இதையடுத்து கடந்த 2 மாதங்களாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். காலை 11.30 மணிக்கு தலைமைச் செயலகம் மற்றும் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடக்க விழா நடைபெற்றது.
முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் இருந்தபடி விமான நிலையம் - சின்னமலை இடையேயான ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கிமலை ஆகிய பகுதிகளில் உள்ள 6 மெட்ரோ ரயில் நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார். முதன்முறையாக சுரங்கப்பாதையில் ரயில் பயணித்தது.

மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விமான நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இரண்டாவதாக புறப்பட்ட ரயிலில் விமானநிலையத்தில் இருந்து அமைச்சர் வெங்கய்யா நாயுடு, அதிகாரிகள், செய்தியாளர்கள் பயணித்தனர்.
ஆலந்தூர் - கோயம்பேடு வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை சராசரியாக தினமும் 10 ஆயிரம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். 2-வது வழித்தடத்தில் சேவை தொடங்கப்படும் நிலையில், இந்த எண்ணிக்கை 15 ஆயிரமாக அதிகரிக்கும். ஆலந்தூரில் இரண்டு வழித்தடமும் இணைவதால், தற்போது விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடுக்கு பயணிகள் செல்ல முடியும்.

ஏற்கெனவே மெட்ரோ ரயில் நிர்வாகம் பயண தூரம் அடிப்படையில் கட்டணம் நிர்ணயித்துள்ளது. அதன்படி, விமான நிலையம் - சின்னமலைக்கு ரூ.40 எனவும், விமான நிலையம் - கோயம்பேடுக்கு ரூ.50 எனவும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications