ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு ஜூன் 6ல் நன்றி தெரிவிக்கிறார் ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, வருகிற 6 ஆம் தேதி தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்.

சட்டசபைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெற்று ஆறாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். இதனையடுத்து வரும் 6ம் தேதியன்று தனது வெற்றிக்கு காரணமான வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கவுள்ளார்.

jayalalithaa visit to R.K.nagar on june 6th

இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பு:

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கடந்த மே 16 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வருகிற 6 ஆம் தேதி தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தனக்கு வாக்களித்த மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவிக்கிறார்.

புரட்சித் தலைவர் ஆழுசு சிலை - பெட்ரோல் பங்க், காசிமேடு, சூரிய நாராயண செட்டி தெரு, ஜீவரத்தினம் சாலை சந்திப்பு, சூரியநாராயண செட்டி தெரு, வீரராகவன் ரோடு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை.

கிராஸ் ரோடு, அருணாச்சலேஸ்வரர் கோயில் தெரு, காமராஜர் காலனி தெரு, சேனியம்மன் கோயில் தெரு, மார்க்கெட் தெரு-வ.உ.சி. சாலை சந்திப்பு, இளைய முதலி தெரு.

வைத்தியநாதன் பாலம், வைத்தியநாதன் பாலம்-எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பு, எண்ணூர் நெடுஞ்சாலை, எண்ணூர் நெடுஞ்சாலை- ஜெ.ஜெ.நகர் சந்திப்பு, எண்ணூர் நெடுஞ்சாலை, வைத்தியநாதன் பாலம், பழைய வைத்தியநாதன் சாலை, புதிய வைத்தியநாதன் சாலை-திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பு, மகாராணி தியேட்டர் ஆகிய இடங்களில் முதல்வர் பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+