என்னது ஒதுக்கப்பட்ட தொகுதியில் தோற்றால் ஜெயிலுக்குப் போகனுமா? பீதியில் தமிழக அமைச்சர்கள்!!
சென்னை: லோக்சபா தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறாமல் போனால் பதவி பறிப்புகளைத் தாண்டி ஏதாவது ஒரு வழக்கில் சிறைக்கு செல்லவும் நேரிடும் என்ற பீதியில் அதிர்ந்து போயுள்ளார்களாம் தமிழக அமைச்சர்கள்.
லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளில் தனித்தே போட்டியிடுகிறது அதிமுக. கடந்த மாதம் 3-ந் தேதி காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி சூறாவளியாக சுழன்று கொண்டிருக்கிறார்.

30-ல் வெற்றி நிச்சயம்
40 தொகுதிகளிலும் வெல்வோம் என்று அவர் பிரகடனம் செய்தாலும் குறைந்தது 30 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் என்ற கணக்குடன்தான் வலம் வருகிறார் ஜெயலலிதா. அதாவது மத்திய சென்னை, தஞ்சாவூர், நீலகிரி, விருதுநகர், கன்னியாகுமரி, தர்மபுரி, நாகை, சேலம், கோவை, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் நிச்சயமாக எதிர்க்கட்சிகள் வென்றுவிடும் என்பது ஜெ. கணிப்பாம்.

எதிர்க் கட்சிகளுக்கு 10
இதனால் எஞ்சிய 30 தொகுதிகள் மட்டுமின்றி இந்த 10-ல் குறைந்தது 5 ஐ கைப்பற்றியே ஆக வேண்டும் என்று 'கட்டளை' பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம். ஆனாலும் ஜெயலலிதா வெல்வோம் என்று கணக்குப் போட்டு வைத்திருக்கும் 30 தொகுதிகளிலும் கூட உள்ளடி வேலைகள் நடப்பதாக உளவுத் துறை தகவல் கொடுத்திருக்கிறது.

நடவடிக்கை ரெடி!
இதனால் கோபமடைந்துள்ள ஜெயலலிதா, அமைச்சர்களுக்கு கொடுத்த புது கட்டளை உங்கள் தொகுதியில் வேட்பாளர் தோற்றால்.. "நடவடிக்கை"யை எதிர்கொள்ள தயாராக இருங்கள்.. ஆனால் அது கட்சி பதவி, அமைச்சர் பதவி பறிப்பு மட்டும் இல்லை..

சிறைவாசம்
பணம் பறிமுதல், வழக்குகள், சிறைவாசம்.. அன்று சுதாகரனுக்கு நடந்தது எல்லாமே உங்களுக்கும் நடக்கும் என்று அதிரடியாக சொல்ல உறைந்து போய்கிடக்கிறார்களாம் அதிமுக அமைச்சர்கள். இதையும் மீறி தஞ்சாவூர், திருச்சியில் ஜெயலலிதாவின் பிரசார கூட்டத்துக்கு கூட்டம் இல்லை என்று அதிமுக ஆதரவு ஊடகங்களே செய்தி வெளியிட மிக மிக கோபமடைந்தாராம்.

திகிலில் அமைச்சர்கள்
இதனால் அந்த தொகுதிகளுக்கான பொறுப்பான அமைச்சர்களை அழைத்து டோஸ் விட்ட கையோடு நடவடிக்கை பாயும் தயாராக இருந்து கொள்ளுங்கள் என்று சொல்ல திகிலடித்தவர்களாக தொகுதிப் பக்கம் திரும்பியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications