9 தேர்தல்களில் போட்டியிட்ட ஜெயலலிதாவுக்கு இது 7வது வெற்றி!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா இதுவரை 9 முறை சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். தற்போது ஆர்.கே.நகர் வெர்றி மூலம் 7வது முறையாக அவர் வெற்றி பெற்றுள்ளார்.
1989ம் ஆண்டுதான் முதல் தேர்தலைச் சந்தித்தார் ஜெயலலிதா. அப்போது போடிநாயக்கனூர் தொகுதியில் சேவல் சின்னத்தில் போடடியிட்டார் ஜெயலலிதா. அதில் அவர் 54.51 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

அடுத்து 1991ம் ஆண்டு அவர் பர்கூர், காங்கேயம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் இரு தொகுதிகளிலும அவர் வெற்றி பெற்றார்.
பின்னர் 1996 தேர்தலில் பர்கூரில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் சுகவீனத்திடம் தோல்வியுற்றார். இதுதான் ஜெயலலிதா சந்தித்த ஒரே தோல்வியாகும்.
அடுத்து 2001 தேர்தலில் அவர் விதிகளுக்குப் புறம்பாக ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய நான்கு தொகுதிகளில் மனு தாக்கல் செய்தார். அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.
2002ல் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வென்ற ஜெயலலிதா மீண்டும் அதே தொகுதியில் 2006 தேர்தலிலும் வெற்றி பெற்றார். 2011 தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு மாறி வந்து வெற்றி பெற்றார். 2015ல் ஆர்.கே.நகரில் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது 7வது முறையாக சட்டசபைத் தேர்தலில் அவர் அதே ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications