இளையராஜா பற்றி அவதூறு... 'ஞாநி கீழ்மையின் உச்சம்'!- ஜெயமோகன்
தான் பெரிதும் நேசித்த இசை மேதை எம்எஸ் விஸ்வநாதனுக்கு இளையராஜா நடத்தும் இசையஞ்சலி நிகழ்ச்சி பற்றி, பத்திரிகையாளர் ஞாநி மிகக் கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார்.
இதனைக் கண்டித்துள்ள முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன், இது கீழ்மையின் உச்சம் என்று எழுதியுள்ளார்.
ஜெயமோகன் தன் இணையத்தில் எழுதியுள்ளது:
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இளையராஜா நடத்தும் இசை நிகழ்ச்சி சார்பாக ஞாநி சங்கரன் எழுதிய குறிப்பை பிறிதொரு தருணத்தில் என்றால் கீழ்மையின் உச்சம் என்றே சொல்வேன்.

ராஜா எம்.எஸ்.வியின் இறப்பு உருவாக்கிய அனுதாபத்தை வைத்து பணம் சம்பாதிக்க முனைகிறார் என்றும் அது கிரிமினல் நடவடிக்கை என்றும் ஞாநி எழுதியிருக்கிறார்.
ராஜாவின் நிகழ்ச்சி மூலம் பெறப்படும் பணம் எம்.எஸ்.வி பேரால் ஒரு டிரஸ்ட் அமைக்க செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அச்செய்தியை அறிந்தும் பொருட்படுத்தாமல் ஞாநி இதை வன்மத்துடன் எழுதுகிறார். இன்று ஞாநி இருக்கும் நிலையில் அவரது நோயுற்ற உடலில் எழும் மனச்சிக்கல் என்றே இதைச் சொல்வேன். அவருக்கு என் அன்பும் அனுதாபமும். என் கவலை அவர் எழுதிய அந்த நோய்வெளிப்பாட்டை ஆதரித்துக் கும்மியடிப்பவர்களைப் பற்றித்தான்.
இந்த இழிவிவாதத்தில் நான் இறங்குவது தகுதிக் குறைவு. ஆயினும் இத்தருணத்தில் இச்சொற்களையேனும் நான் சொல்லியாகவேண்டும். ராஜா எம்.எஸ்.வி மீது கொண்டிருந்த பெருமதிப்பை நான் கண்டிருக்கிறேன். எம்.எஸ்.வியின் பாடல்களை ராஜா பாராட்டி நெகிழ்ந்து எனக்குப் பாடிக் காட்டிய அரிய அனுபவமும் உண்டு. அவர்களுக்கிடையேனான உறவு என்பது நம் சமகாலத்து அற்புதங்களில் ஒன்று. ராஜா எம்.எஸ்.விக்குச் செய்த பெரும் பொருளியல் உதவிகளையும் நான் தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன். எம்.எஸ்.வியின் தன்மதிப்பு பாதிப்படையாமல் அதை ராஜா செய்வதில் இருந்த நளினமான பாவனைகளைக் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன். ஒரு தம்பியின் இடத்திலேயே என்றும் ராஜா எம்.எஸ்.விக்கு இருந்தார்.
நம் சிறுமை எந்த எல்லை வரைச் செல்லும்? நம்மால் எந்த மகத்துவத்தின் முன்னும் பழிப்புகாட்டி மேலும் சிறியவர் ஆவதற்கு மட்டுமே முடியுமா என்ன? இந்த மண்ணில் நாம் வாழும் வாழ்க்கையை சற்றேனும் தாங்கிக்கொள்ளும்படிச் செய்த கலைஞர்களுக்கு நாம் செய்யும் கைம்மாறு இதுதானா?"
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications