சசிகலாவை பகடைக்காயாக்குகிறார் டிஐஜி ரூபா.. 'பொங்கும்' திவாகரன் மகன் ஜெயானந்த்
தன் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க எங்கள் பொதுச் செயலாளரை பகடைக்காயாக்குகிறார் கர்நாடக சிறைத் துறை டிஐஜி ரூபா என்று திவாகரன் மகன் ஜெயானந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: கர்நாடக சிறைத் துறை டிஐஜி ரூபா தன் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க சசிகலா மீது பழி போடுகிறார் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் கொந்தளித்திருக்கிறார்.
பெங்களூர் பரப்பன சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு விஐபி உபசரிப்பு வழங்கப்பட்டு வருகிறது என்றும், அவருக்கென்று தனி சமையலறை உள்ளது என்றும் சிறையில் சொகுசான வாழ்க்கையை பெற சிறை துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக சிறை துறை டிஐஜி ரூபா மாநில டிஜிபி தத்தாவுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

சிறை அதிகாரிகளுக்கே லஞ்சம் வழங்குவதா என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து சசிகலாவின் அண்ணன் மகன் ஜெயானந்த் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், டிஐஜி ரூபாவுக்கு அந்த மாநில சிறை துறை டிஜிபி இரு முறை மெமோ கொடுத்துள்ளார். அந்த குற்றச்சாட்டை திசைத்திருப்ப எங்கள் பொது ச் செயலாளர் சசிகலாவை பகடைக்காயாக்குகிறார். தண்ணீர், உணவு, படுக்கை வசதி அளிக்கப்படுகிறது.
இதையெல்லாம் சிறப்பு வசதி என்று குற்றம்சாட்டினால் என்ன சொல்வது. இந்த குற்றச்சாட்டை முதல்முறையாக ரூபா வைத்துள்ளார். அந்த குற்றச்சாட்டை இது வரை அவர் எழுத்துப்பூர்வமாக டிஜிபிக்கு அளிக்கவில்லை.
செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் மட்டும் அளித்தார். சிறைத் துறை டிஜிபி மீதான குற்றச்சாட்டு ஏன் இத்தனை பரபரப்பாக பேசப்படுகிறது. சசிகலா மீது முன்னிறுத்தி வைக்கப்பட்டதால்தான் என்றார் ஜெயானந்த்.












Click it and Unblock the Notifications