For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதலமைச்சரின் கூடுதல் செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமனம் - தமிழக அரசு உத்தரவு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் கூடுதல் செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் இன்று பிறப்பித்தார்.

தமிழக அரசில் புதிதாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் துறை வாரிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக கணேஷ் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தின் இணை இயக்குநராக உள்ளார்.

 Jayashree Muralidharan apponted as a Additional Chief Secretary

தனிப்பிரிவு அதிகாரியாக இதுவரை செயல்பட்டு வந்த இன்னோசன்ட் திவ்யா அந்த பொறுப்பில் இருந்து விடுவி்க்கப்பட்டுள்ளார். முதலமைச்சரின் கூடுதல் செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயஸ்ரீ முரளிதரன் திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக திருமயம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., பி.கே.வைரமுத்து நியமிக்கப்பட்டுள்ளார்.

English summary
Jayashree Muralidharan is Additional Chief Secretary of tamilnadu government
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X